search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜலந்தர் பி‌ஷப்"

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) என்பவர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.

    இதுபற்றி அவர் குருவிலங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2016-ம் ஆண்டு வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    தன் மீதான பாலியல் புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு அவர் கேட்ட சலுகைகளை தான் செய்து கொடுக்காததால் தன்னை மிரட்டுவதற்காக பொய் புகார் கூறி உள்ளதாக தெரிவித்தார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று (19-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்கள். இதை ஏற்றுக்கொண்ட பி‌ஷப் தனது பொறுப்புகளை மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணைக்கு ஆஜராக நேற்றே அவர் கேரளா வந்து விட்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இன்று காலை வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் கோட்டயத்தில் முகாமிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் கூறும்போது பி‌ஷப்பிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இன்றைய விசாரணையின் போது பி‌ஷப்பிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பற்றி போலீசார் கொச்சி சரக ஐ.ஜி. விஜய்சகோராவிடமும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் நேற்று கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 25-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் 25-ந்தேதி வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப்பை கைது செய்ய கோரி கொச்சியில் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று 13-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் பங்கேற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பி‌ஷப்பை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

    இன்று போராட்டம் நடைபெறும் இடத்திலும் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   #JalandharBishop #FrancoMulakkal
    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஜலந்தர் பி‌ஷப்பிடம் தனிப்படை போலீசார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். #Jalandharbishop #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.

    புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குருவிலாங்காடு கன்னியர் மடத்தின் விருந்தினர் இல்லத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறி இருந்தார்.

    இதன் பேரில் கோட்டயம் போலீசார் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த கன்னியர் மடத்திற்கு சென்று விசாரணையும் நடத்தினர்.

    கன்னியாஸ்திரியின் புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக பொய் புகார் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் பி‌ஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மேலும் புகார் கூறப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. எனவே கோட்டயம் போலீசார் இப்புகார் தொடர்பாக பி‌ஷப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்கிடையே கேரள கத்தோலிக்க ஆலய சீரமைப்பு குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தனர். அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி‌ஷப்பை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர்.

    இதற்கு நேற்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடந்த 2014 முதல் 2016 வரை நடந்துள்ளது. எனவே இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    பி‌ஷப்பிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளோம். அதன் பிறகே அவரை கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் நேற்று கைதாவார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று கூடுதல் எஸ்.பி. சுபாஷ் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ஜலந்தர் சென்றது. அவர்கள் நேற்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றனர்.

    இரவு 7.45 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 4.45 மணிக்கு வெளியே வந்தனர். சுமார் 9 மணி நேரம் அவர்கள் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை முடிந்து வெளியே வந்த கூடுதல் எஸ்.பி. சுபாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் பாலியல் புகார் குறித்து விரிவாக விசாரித்தோம். குருவிலாங்காடு கன்னியர் மட விருந்தினர் இல்லத்தில் அறை எண் 20-ல் பி‌ஷப் தங்கி இருந்தாரா? என்றும் கேட்டோம். ஆனால் பி‌ஷப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.

    சம்பவ நாளில் குருவிலங்காடு செல்லவில்லை என்று கூறுகிறார். கன்னியாஸ்திரி கூறியதும், பி‌ஷப் கூறுவதும் முரண்பட்டதாக உள்ளது. எனவே இதுபற்றி மீண்டும் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. அந்த விசாரணை முடியும் வரை பி‌ஷப்பை கைது செய்ய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Jalandharbishop #Nun
    ×